பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர்..!

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை இன்று சந்தித்தேன். சந்திப்பு சிறப்பானதாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.