மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு …!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் ஆட்சி கடந்தாண்டு கலைக்கப்பட்டு, மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வீடு காவலில் வைக்கப்பட்டிருந்த சூகி மீது 11 ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது.

இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு எதிரான வழக்கில் 600000 டாலர் பணம் பெற்றதாக சூகி மீதுள்ள புகார் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அந்நாட்டு நீதிமன்றம் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் சூகிக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இருப்பதால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

author avatar
Rebekal