நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி…

நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி…

நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, 60 மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றது.

 அதன்பின் எஸ்.பி.வேலுமணி, நள்ளிரவில் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்கு சென்று, ஈபிஎஸ் மற்றும் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மற்றும் விசாரணை குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இன்று அதிமுகவின் உயர்மட்டகுழுவின்  அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube