#BREAKING : முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை 6.30 மணி முதல் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்

இதைத்தொடர்ந்து, சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் , எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்த நிலையில், தற்போது கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் கே.சி.வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
murugan