கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அகிலா பிரியா கைது..!

முன்னாள் ஹாக்கி வீரர் பிரவீன் ராவின் வீட்டிற்குள் நுழைந்த கடத்தல்காரர்கள் அவரின் குடும்பத்தினரை மிரட்டி காரில் பிரவீன் ராவ், சுனில் ராவ் மற்றும் நவீன் ராவ் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் கார்களைக் கண்டுபிடித்தனர்.

கடத்தல்காரர்கள் கடத்திய மூன்று பேரையும் நர்சிங்கி அருகே விட்டுச் சென்றனர். பின்னர், அவர்கள் மூன்று கார்களில் மொய்னாபாத் நோக்கி தப்பிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட கடத்தல்காரர்கள் விசாரணையின் போது அகிலா பிரியா மற்றும் அவரது கணவர் பார்கவா ராம் ஆகியோரின் பெயர்களை கூறினார்.

இந்நிலையில், முன்னாள் ஹாக்கி வீரர் மற்றும் அவரது உறவினர்களைக் கடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் பூமா அகிலா பிரியா மற்றும் மற்றும் அவரது கணவர் பார்கவா ராம் ஆகியோர் ஐதராபாத் போலீசாரால் கைது செய்துள்ளனர். அகிலா பிரியா விசாரணைக்காக பேகம்பேட்டை பெண்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
murugan