திணறும் இந்தியா…ஆதரவு கொடுக்கும் முன்னாள் வீரர்கள்….

நடைபெற்று வரும் உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதி வருகின்றன. நேற்றைய ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கிய ஆட்டத்தில் நியூஸிலாந்து 50 ஓவர் முடிவில் 239 ரன் அடித்தது.பின்னர் 240 எடுத்தல் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சீட்டு கட்டாய் சரிந்தது. ரோஹித் , ராகுல் மற்றும் கோலி 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.சிறிது நம்பிக்கை கூறிய ஆட்டத்தை கொடுத்த பண்ட் , பாண்டியா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க  இந்திய அணியின் உலக கோப்பை கனவு தகர்ந்துள்ளது.

 

தொடர்ந்து களமிறங்கிய தோனி மற்றும் ஜடேஜா தங்களது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சளார் ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார். அதில் இந்தியாவால் வெற்றி பெற முடியும்.இந்திய அணியை நம்பி ஆதரவு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.