திமுக முன்னாள் எம்.எல்.ஏ நைனா முகம்மது மாரடைப்பால் இன்று காலமானார்.!

தென்காசி மாவட்டம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ நைனா முகம்மது மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

தென்காசியில் கடையநல்லூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார் நயினா முகமது. பின்னர்ட் 2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, 17 ஆண்டுகள் அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை நயினா முகமது வகித்து வந்தார்.

தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற அதிமுக அரசு ஆதரவு அளித்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்