கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டிகளை தாயிடம் ஒப்படைத்த வனத்துறையினர்..!

மகாராஷ்டிரா மாநிலம், ஷீரூர் மாவட்டத்தில் நாகர்கான் என்ற மலையடிவார கிராமம் உள்ளது. அங்குவுள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்து வந்தனர். தோட்டத்தின் மையப்பகுதியை அடைந்ததும், அங்கிருந்தவர்கள் மூன்று சிறுத்தை குட்டியை கண்டனர்.
இது குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அந்த குட்டிகளை மீட்டு அவர்கள் வைத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு, குட்டிகளை தேடி தாய் வந்தது. அப்பொழுது வனத்துறையினர், தாய் நடமாடிய பகுதியில் குட்டிகளை விட்டனர்.