வெளிநாட்டு பயணிகள் மலேசியாவிற்கு செல்ல டிசம்பர் வரை தடை தொடரும்.!

வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு பயணிகள் வர டிசம்பர் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை பல நாடுகளில் தடை செய்துள்ளனர். தற்போது பல இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்தும் உள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து வருகிறது. அதே போன்று அமெரிக்கா, ரஷ்யா, மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் உலக நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகம் என்பதால் டிசம்பர் கடைசி வரை வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் முஹையதின் யாசின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.