முதன்முறையாக அதிக பெண் எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர் – பிரதமர் நரேந்திர மோடி

முதன்முறையாக அதிக பெண் எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.எதிர்க்கட்சி தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியமானவை.முதன்முறையாக அதிக பெண் எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர்.இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் தொடங்குகிறது என்று பேசினார்.