கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 11 கோடி திரட்டிய விராட் கோலி & அனுஷ்கா தம்பதி..!!

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 11 கோடி விராட் கோலி அனுஷ்கா தம்பதி திரட்டியுள்ளனர். 

கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து ரூ.2 கோடி நிதியுதவியை கடந்த மே 7 ஆம் தேதி வழங்கினார்கள். அதனை தொடர்ந்து “InThisTogether” என்ற ஹாஷ்டேக் மூலம் ‘கெட்டோ’ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து விராட்கோலியும் அனுஷ்கா சர்மாவும் கொரோனா நிவாரணத்திற்காக ரூ.7 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருந்தார்கள். இதில் முதற்கட்டமாக 2 கோடி வழங்கினார்கள்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து  ரூபாய் 11 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளதாக விராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் ” இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. ஒரு முறை இல்லை நாங்கள் இருமுறை இலக்கை தாண்டிவிட்டோம். நிதியுதவி அளித்தவர்களுக்கும் தகவலைப் பகிர்ந்தவர்களுக்கும் என அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ. 11.39 கோடி நிதியை கேட்டோ அமைப்பின் வழியாக விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் திரட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

59 mins ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

3 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

5 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

6 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

6 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

6 hours ago