மக்களின் கவனத்திற்கு.! வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள்.!

  • சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று வருகிறது.
  • அதில் சுகாதாரத்துறை சார்பாக வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து துறை சார்ந்த புரிதல்கள் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுருக்கிறது.

அதில், சுகாதாரத்துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரத்யேக அரங்கில், மருத்துவக் கல்வி, தொழு நோய், காச நோய், புகையிலை தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் குறித்த விரிவான விளக்கங்கள் எளிமையாக புரியும் வகையில் உள்ளன. குறிப்பாக, அம்மா முழு உடல் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவில் இருந்து மருத்துவ சாதனங்கள்  இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதில் வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் பருமன், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, எடை, உயரம், உடல் பருமன் குறியீடு, ரத்த அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை அளவு, பார்வை திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் சில நிமிடங்களில் மேற்கொள்ள படுகின்றது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: முழு உடல் பரிசோதனை அரங்கில் ரத்த அணுக்களின் அளவு, ரத்த சா்க்கரை அளவு ஆகியவை ரத்த மாதிரிகளைக் கொண்டு பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, அதற்கு உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. சுற்றுலா கண்காட்சிக்கு செல்வோர் மறக்காமல் சுகாதாரத்துறை அரங்கிற்கு சென்று குறைந்த செலவில் இந்த பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்