வங்கி கணக்கு குறித்து SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி வேண்டுகோள்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை அணுக தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைக் கேட்கும் போலி எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. அதாவது, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, உங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிரும்படி கேட்கும் மின்னஞ்சல்கள் / எஸ்எம்எஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம். அப்படி ஏதேனும் செய்தி வந்தால், உடனடியாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகாரளிக்கவும் என்றும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. மோசடியை தடுக்க இந்த எச்சரிக்கை வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறுகையில், எஸ்பிஐ சார்பாக மோசடி செய்பவர்கள் அடிக்கடி போலியான எஸ்எம்எஸ் எச்சரிக்கையை அனுப்புகிறார்கள்.
உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி, எஸ்எம்எஸ்ஸில் வழங்கப்பட்ட URL-ஐ பார்வையிடுவதன் மூலம் உங்கள் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறு வலியுறுத்துகின்றனர். இணைப்பைக் கிளிக் செய்த பிறகு நீங்கள் போலியான SBI இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதனால் உங்கள் விவரங்கள் மற்றும் நிதி பறிபோக வாய்ப்பு உள்ளது. இதனால், எஸ்.பி.ஐ அல்லது வேறு எந்த வங்கியும் எஸ்எம்எஸ்ஸில் பதிக்கப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கேஒய்சியைப் புதுப்பிக்கவோ அல்லது முடிக்கவோ உங்களைக் கேட்காது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
இது தங்களின் கணக்கை திறக்க வழிவகுக்கும். இதுதொடர்பாக எஸ்பிஐ கடந்த மாதம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது. இதுபோன்ற எஸ்எம்எஸ், மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் மேலும் உங்கள் சேமிப்பை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்திருந்தது. இது எஸ்எம்எஸ் மூலம் நடந்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராடும் முயற்சியாக இருந்தது. நீங்கள் ஒரு எஸ்எம்எஸ் பெறும்போது, சரியானதா என்று பார்த்து விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளது #SafeWithSBI.
மேலும், எஸ்பிஐ இணையதளத்தில், “வாடிக்கையாளரின் தகவல்களைப் பெற எஸ்பிஐ ஒருபோதும் மின்னஞ்சல் அனுப்புவதில்லை. உங்கள் பயனர் பெயர் அல்லது கடவுச்சொல் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட தகவலைச் சேகரிக்க SBI-ஆல் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் மின்னஞ்சலைப் பெற்றால் உடனடியாக புகாரளிக்கவும். உங்கள் தனிப்பட்ட அல்லது நிதித் தகவலைப் பிறருக்கு வழங்காதீர்கள். உங்கள் கணக்குத் தகவலை இணையதளத்தில் சேமிக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
யாராவது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்துகிறது. உங்கள் வங்கிக்கு நீங்கள் தெரிவிக்கும் போது, உறுதிசெய்தலைப் பெற மறக்காதீர்கள். உங்கள் புகாரைத் தீர்க்க வங்கிக்கு ரசீது தேதியிலிருந்து 90 நாட்கள் உள்ளன. உங்கள் கடவுச்சொல், பின் அல்லது OTP போன்ற உங்களின் அலட்சியத்தால் பரிவர்த்தனை நடந்திருந்தால், உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கும் வரை இழப்புக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் வங்கிக்குத் தெரிவித்த பிறகும் மோசடியான பரிவர்த்தனைகள் தொடர்ந்தால், அந்த நிதியை உங்கள் வங்கி உங்களுக்குத் திருப்பித் தர வேண்டும். நீங்கள் அறிக்கையிடலை ஒத்திவைத்தால் உங்கள் இழப்பு அதிகரிக்கும். மோசடியான பரிவர்த்தனையை நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும் அல்லது மேலும் தகவலுக்கு 14440 என்ற எண்ணை அழைக்கவும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
A message in circulation claiming that your @TheOfficialSBI account has been blocked is #FAKE #PIBFactCheck
▶️ Do not respond to emails/SMS asking to share your personal or banking details.
▶️ If you receive any such message, report immediately at [email protected] pic.twitter.com/Y8sVlk95wH
— PIB Fact Check (@PIBFactCheck) May 18, 2022