கொரோனாவால் ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழப்பு.!

கொரோனாவால் ஸ்பெயினில் 7753 பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும்    288 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில் 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா என்பவர் மலகாவைச் சேர்ந்த கிளப் அட்லெடிகோ போர்ட்டாடா ஆல்டாவின் ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

இவர் கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னரே அவருக்கு புற்றுநோயை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையெடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்த இளைய நபர் என்ற இவர்தான். மலகா நகரில் வைரஸால் இறந்த இளைய நபர் கார்சியா ஆவார்.மலகா நகரில் ஏற்கனவே இறந்த நான்கு பேரும் 70 வயதிற்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan