உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்த கட்டாயமாக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் ..!

உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்த கட்டாயமாக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் ..!

உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவு விநியோகம் செய்வோர், பார்சல் பேப்பர்கள், கவர்களை பிரிக்க எச்சில் தொட்டு பயன்படுத்துவதால் தொற்று பரவும் அபாயம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது, வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணவு பொருள்களை கையாள்பவர்கள் எச்சில் தொட்டு பயன்படுத்தக்கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube