தமிழக அரசு அனுமதி அளித்தால் விமானங்கள் இயங்கும்!

தமிழக அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து விமானங்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மே-31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லிக்கு விமானங்கள்  25-ம் தேதி முதல் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும்,  தமிழக அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து விமானங்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 25-ம் தேதி காலை 5.25 மணிக்கு டெல்லிக்கும், காலை 6.50க்கு பெங்களூருக்கும் விமான சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.