கொரோனா சிகிச்சை மையங்களாகும் ஐந்து நட்சத்திர விடுதிகள்…!

மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 நட்சத்திர விடுதிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 நட்சத்திர விடுதிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த முயற்சி எடுக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.