கேரளாவில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு! முதலில் எந்த படம் வெளியாகிறது தெரியுமா?

10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது. 

கொரோனா ஊரடங்கு  காரணமாக,கேரளா முழுவதும் 10 மாதங்களாக, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, திரையரங்குகள் திறப்பு குறித்து தொடர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர்  திரைப்படம் தான் முதன்முதலாக வெளியிடப்படவுள்ளது.  ஆனால்,80 மலையாள படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.