விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இயங்கலாம்-மாவட்ட ஆட்சியர்

பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதலில் ஏப்ரல் 14-ஆம்  தேதி வரை முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் 20-ஆம் தேதிக்கு கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் கண்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.