#BREAKING: சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!

சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண் தொழிலார்கள் உட்பட 5 பேர் சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

பட்டாசு தொடந்து வெடித்து சிதறுவதால் தீயை அணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசுவெடி விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan