FireAccident : கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து..!

கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர். 

கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். பழைய பொருட்கள் மற்றும் குப்பைகள் குவிந்து இருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விபத்து எப்படி ஏற்பட்டது என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.