கிரேட்டர் நொய்டாவில் தீ விபத்து.! 50 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்..!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

புதுடெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று (சனிக்கிழமை)  6 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித தீக்காயங்கள் இன்றி மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இது குறித்து கூடுதல் காவல் ஆய்வாளர் (commissioner of police)  ரவிசங்கர் சாபி கூறுகையில், கட்டடத்தின் அடித்தளத்தில் இருந்து தீயானது ஏற்பட்டது, இதில் சிக்கிக்கொண்ட பலர் படிக்கட்டுகள் வழியாக மீட்கப்பட்டனர் என்று கூறினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் என்னவென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment