முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மற்றும் பலர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிபொருட்களுடன் கார் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.
வெடிபொருட்களுடன் காரை நிறுத்தியதாக மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு சேர்ந்த உதவி ஆய்வாளர் சச்சின் வாசியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் வீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரே-க்கு 8 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பாக மும்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலித்து உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கி விட்டார் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் வீர் சிங்கின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மற்றும் பலர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…