கேப்டனை கடுபேத்திய இங்கிலாந்து அரச குடும்பம்..!உலகக்கோப்பை சுவாரஷ்சியம்..!

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது.இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அணி கேப்டன்கள் எல்லாம் நேற்று முன்தினம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்து உரையாற்றினர்.

அந்த உரையடாலின் போது இளவரசர் ஹேரி ஆஸ்திரேலியா கேப்டனை தனது கேள்விகளால் சீண்டி கடுப்பேத்தி உள்ளார் அந்த தகவல் தற்போது தான் கசிந்து உள்ளது.

Image result for cwc19 captains meet

அப்படி என்ன கடுப்பேத்தினார் என்றால் அனைத்து கேப்டனை சந்தித்து உரையாடிய ஹேரி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன்  பிஞ்ச்_சை சந்தித்து உள்ளார் அப்போது சில கேள்விகளை கேட்டுள்ளார்.அந்த கேள்விகள்

உங்களுக்கு சற்று வயசாகி விட்டது போல தெரிகிறதே..?இன்னுமா அணியில இருக்கீங்க..?எத்தனை காலமா தான் விளையாண்டு கொண்டே இருப்பீங்க..? என்று கேட்டுள்ளார்.அதற்கு  ஆரோன்  பிஞ்ச்  எதுவும் பேசாமல் சிரித்து கொண்டே எட்டு வருடமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்று மட்டும் பதில் அளித்துள்ளார். அதற்கு அடுத்து மீண்டும் கேள்வி எழுப்பிய ஹேரி ஆமாம் உலக கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு உள்ளது என்று திரும்ப திரும்ப அவரிடமே  கேட்க இந்த கேள்வியில் கடுப்பாகிய ஆரோன்  பிஞ்ச்  இங்கிலாந்து மற்றும் இந்தியா என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.

 

author avatar
kavitha

Leave a Comment