திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திகடன் செய்த பரமக்குடி பெண்ணுக்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டுள்ளார்.
அதன்படி,பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் மே 3 ஆம் தேதியன்று காலை வனிதா தனது நாக்கினை அறுத்துக் கொண்டு கோவில் வாசலிலே நாக்கை வைத்து நேர்த்திகடனை செலுத்தியுள்ளார்.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வனிதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில்,பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனிதாவை,திமுக நகரச்செயலாளர் சேது கருணாநிதி,உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவ செலவுக்கு நிதியுதவி அளித்தனர்.இதனைத்தொடர்ந்து திமுக மாநில விவசாய அணி செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயனும் வனிதாவுக்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…
Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை…
Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் ஏழு…
Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5…
ஐபிஎல் 2024 : இன்றைய நாளின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சித்திரை திருவிழா 2024 : பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர…