ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது எதிர்த்து அரசு சார்பு ஊழியர்கள் தலையில் மண்சட்டி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி_யில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் சாலையில் நின்று ஹெல்மட் அணியாத வாகான ஒட்டிகளை நிறுத்தி எச்சரித்தார்.
இந்நிலையில் ஹெல்மட் கட்டாயத்தை எதிர்த்து , புதுச்சேரியில் உள்ள கொக்கு பார்க் அருகே அரசு சார்பு ஊழியர்கள் தலையில் மண்சட்டியை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் ஐந்து துறைகளில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.மேலும் சம்பளம் வழங்க முடியாத நிலையில் ஹெல்மெட் சட்டம் அவசியமா என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.