குளியல் வீடியோவை எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த 15வயது சிறுமி மரணம்.!

குளிக்கும் போது 15 வயது சிறுமியை வீடியோ எடுத்து 3 இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேலூரை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளி பகுதியில் குளித்துள்ளார். அப்போது அதனை அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி, 5 ஆயிரம் பணம் மற்றும் தங்களது ஆசைக்கு இணங்குமாறும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்த மாணவி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். சிறுமியின் அழுகை குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, 90% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுமியை வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சிறுமி ஏற்கனவே தன்னை வீடியோ காட்டி மிரட்டிய 3 இளைஞர்களான கணபதி, ஆகாஷ் மற்றும் 17வயது சிறுவனை குறித்து போலீசாரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் போலீசார்.