நெல்லை அருகை லாரி மோதி பெண் தபால்காரர் பலி

நெல்லை அருகை லாரி மோதி பெண் தபால்காரர் பலி

சங்கரன்கோவில் கோமதியாபுரம் சேர்ந்த திருவுடையான் மகள் அன்பரசி  வயது (23).பிஎஸ்சி பட்டதாரியான இவர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்டவுமனாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று தனது வழக்கமான பணிக்கு அழகிய பாண்டியபுரத்தில் இருந்து மானூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை வந்துகொண்டிருந்தார். சிற்றாற்று பாலம் அடுத்து கட்டாரங்குளம் விலக்கு அருகே சென்றபொழுது பின்னாடி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழிந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த மானூர் காவல்துறையினர் அன்பரசி உடலைகைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான சௌந்தராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் தந்தை திருவுடையான் இசையோடு இடது சிந்தனையையும் மக்கள் மனதில் விதைத்து மக்கள் பாடகர் என்று அழைக்கப்பட்டவர்.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு  சாலை விபத்தில் இறந்தார்.தற்பொழுது இவர் மகளும் சாலை விபத்தில் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியதுள்ளது.

.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube