செங்கல்பட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனைமரத்தில் மோதி பெண் மருத்துவர் உயிரிழப்பு!

செங்கல்பட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனைமரத்தில் மோதி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் அருகே ஓரியூர் என்னும் இடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண் மருத்துவராகிய ரேகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பாண்டிச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்தில் மோதி உள்ளது.

இதில் கார் சுக்குநூறாக உடைந்துள்ளது, பெண் மருத்துவர் ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் உட்பட மற்ற மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Rebekal