கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிற நிலையில், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த இல்லை பிரச்சனையின் பிரதிபலிப்பாக சீனாவிற்கு எதிராக இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த நடவடிக்கையின்படி இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69-ஏ இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதுகுறித்து கூறுகையில் இந்திய அரசு கூறுகையில், மக்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது நிலையில், கடந்த ஆண்டு இறுதிவரை 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவற்றை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து சீன நிறுவனங்கள் அளித்துள்ள பதில்கள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லாததால், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் டிக் டாக், விசாட், சார் இட், யூசி ப்ரவுசர், ஷாப்பிங் செயலிகள், கிளப் ஃபேக்டரி போன்ற செயலிகளும் அடங்கும்.
ஒரு சில தினங்களுக்கு முன் தினம் சிக்கிம் எல்லையில், சீன வீரர்கள் மீண்டும் அத்துமீறல் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது .
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…