பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுக்கான அட்டவணையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வுக்கான அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் அடுத்த மாதம் பிப். 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழக கல்லுரிகளில் இறுதி பருவ தேர்வு தவிர, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களின் அரியர் தேர்வுகளும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இதனிடையே, அரியர் தேர்வுகளை நடத்தாமலேயே முடிவுகளை சில பல்கலைக்கழகங்கள் வெளியிட்டதாக கூறி, ராம்குமார் மீண்டும் ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அரியர் தேர்வை கட்டாயம் நடத்தவும், தேர்வே நடத்தாமல் முடிவுகளை வெளியிடவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவின்படி பல்கலைகழகங்கள் தேர்வுகளை நடத்த முடிவு செய்திருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுக்கான அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …