கொரோனாவுக்கும் பயம், பேரக்குழந்தை மீதும் பாசம் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

கொரோனாவுக்கும் பயம், பேரக்குழந்தை மீதும் பாசம் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

கொரோனாவால் தங்கள் பேரக்குழந்தைகளை கண்ணாடி வழியாக பார்க்கும் தாத்தா-பட்டி மற்றும் அவர்களின் நாய் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று தங்களுக்கு வந்தவர்களிடம் கூட இல்லாத அச்சம் வராதவர்களிடம் முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறது. அதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் முன்னணி நாடக விளங்க கூடிய அமெரிக்காவில் இது குறித்த விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளை கவனித்து கொள்வதில் மிக அக்கறை காட்டுகின்றனர்.

அது போல தற்பொழுது அமெரிக்காவில் உள்ள ஒரு முதிய தம்பதியினர் தங்களது பேரக்குழந்தையை கண்ணாடி வழியாக பார்க்கின்றனர். அவர்கள் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களது நாய்க்கும் தூக்கி காட்ட அந்த நாய் மிக சந்தோஷத்துடன் காணப்படுகிறது. இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வைரலாகி வருகிறது.

grandparents

author avatar
Rebekal
Join our channel google news Youtube