தந்தை, மகன் கொலை வழக்கு ! கிளை சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை

தந்தை, மகன் கொலை வழக்கு ! கிளை சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை

கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. சாத்தான்குளத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளது.சிபிசிஐடி கைப்பற்றிய ஆவணங்களை ஏற்கனவே சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.

இதனிடையே சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன்  விசாரணை நடத்தி வருகிறார் .இந்நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Join our channel google news Youtube