தந்தை ,மகன் உயிரிழந்த வழக்கு ! இன்று முதல் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் இன்று  முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக  சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை வருகிறது.விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

 இந்நிலையில் இந்த வழக்கில் இன்று  முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. கைதாகியுள்ள காவலர்களை விசாரிக்க இன்று  7 பேர் கொண்ட சி.பி.ஐ குழு  டெல்லியில் இருந்து மதுரை வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.