தந்தை ,மகன் உயிரிழந்த வழக்கு – சிபிஐ ஆலோசனை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ குழு மதுரையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை வருகிறது.விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

 இந்நிலையில் இன்று மதுரை சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழு ஆலோனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

 .