மதுவை குடிப்பதற்காக குழந்தையை விற்ற தந்தை!திடுக்கிடும் தகவல்!

ஒரிசா மாநிலத்தில் உள்ள புஜாரிகுடா கிராமத்தில் சாகரம் லோஹர் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவரது மனைவி சனாமதி ஆவார்.இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சாகரம் தன் மனைவி மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.அப்போது போகும் வழியில் உள்ள மது கடையை பார்த்தவுடன் மதுவை குடிக்கும் எண்ணம் வந்துள்ளது.

உடனே அவர் தன் மனைவியிடம் இதை கூறியுள்ளார்.அதற்கு அவர் அவ்வாறு செய்ய கூடாது என மறுத்துள்ளார்.உடனே ஆத்திரம் அடைந்த சாகரம் அருகில் இருந்த இரண்டு நபரிடம் குழந்தையை 1000-த்திற்கு விலை பேசி விற்பனை செய்துள்ளார்.

இதை மறுத்த மனைவியை அவர் கடுமையாக தாக்கியது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக அவரின் மனைவி சனாமதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றன.

மேலும் பெற்ற குழந்தையை குடிப்பதற்காக விலை பேசி விற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.