வலியை மறந்து தனது மகனுக்காக பச்சை குத்திக்கொண்டு தந்தை.! ஏன் தெரியுமா?

தனது உடலில் உள்ள பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்ட 8 வயது மகனுக்காக 30 மணி நேரம் செலவிட்டு அதேபோல் பச்சை குத்திக்கொண்டு தந்தை.

கனடா எட்மண்டனை சேர்ந்த டெரெக் ப்ரூ எஸ்.ஆர், தனது 8 வயது மகன் நீச்சல் செல்லும் போது தனது உடம்பில் பெரிய மச்சம் இருந்ததால் சட்டையை கழற்ற விரும்பவில்லை என்பதைக் கவனித்துள்ளார் தந்தை. இதனால் தனது உடம்பில் அதேபோல் பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதைச் செய்வது நல்லது என்று உணர்ந்த தந்தை கிட்டத்தட்ட 30 மணி நேரம் செலவிட்டு தனது மகனுக்காக வலியை மறந்து பச்சை குத்திக்கொண்டார்.

இது அவரது மகனுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரு ஹோட்டல் குளத்தில் விளையாடுவதற்கு தனது மகனுடன் தயார் ஆனார். அப்போது தனது சட்டையை கழற்றி உள்ளார். பின்னர் எனது பிறப்பு அடையாளத்தின் ஒரு பெரிய பச்சை குத்திக்கொண்டிருந்தது என்று 8 வயது சிறுவன் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியாக உணர்ந்தார் – கொஞ்சம் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

அப்பாவின் சிவப்பு ஒயின் வண்ண பச்சை அவரது மார்பு மற்றும் வயிற்றின் ஒரு பகுதியை உள்ளடக்கிய, அவரது இடது கையின் கீழ் நீண்டுள்ளது. அப்பா மகனை விட பெரியவர் என்பதால் பச்சை குத்திக்கொள்வது பெரியதாக இருக்க வேண்டும்.உடலில் எங்கு இருந்தாலும், பச்சை குத்தும்போது வலிக்கும் என்று அங்குள்ள ஜூசி குயில் டாட்டூ ஸ்டுடியோவின் உரிமையாளர் டோனி கிபர்ட் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்