மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு..!

மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையபட்டியை சார்ந்தவர் ஆறுமுகம்(75). இவரது மகன் ராஜாங்கம் (46).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகள் ஒரு மகன் உள்ளனர் .
இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.ராஜாங்கம் வார சந்தைகளில் காய்கறிகளை விற்று வருகிறார்.நீண்ட நாள்களாக ராஜாங்கம் வயிற்று வலியால் அவதிபட்டு வந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி காரணமாக ராஜாங்கத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிதனர்.ராஜாங்கத்தை மருத்துவமனையில் அனுமதித்த சில நேரத்திலே இறந்து உள்ளார்.
பின்னர் ராஜாங்கத்தின் உடல் அவரது சொந்த ஊரான அரையபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜாங்கத்தின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.அப்போது ராஜாங்கத்தின் தந்தை ஆறுமுகமும் கதறி அழுதார்.அப்போது திடீரென ஆறுமுகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து ஆறுமுகத்தை பரிசோதனை செய்தனர்.மருத்துவ பரிசோதனையில் ஆறுமுகம் இறந்தகாக மருத்துவர் கூறினார்.ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை ,மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

author avatar
murugan
Join our channel google news Youtube