மகனின் பள்ளி வாட்சப் குருப்பில் ஆபாச படங்களை பகிர்ந்த தந்தை கைது…!

மகனின் பள்ளி வாட்சப் குருப்பில் ஆபாச படங்களை பகிர்ந்த தந்தை கைது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தான் 9  முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில், தனது மகனின் பள்ளி வாட்சப் குரூப்பில், 44 ஆபாச பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக, ஆவடியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர், ஆறாம் வகுப்பு மாணவரின் தொடர்பு எண்ணிலிருந்து இதுபோன்ற படங்கள் பெறப்படுகின்றன என்று நகர காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், 44 வயது மதிக்கத்தக்க அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.