தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்..தமிழகம் முழுவதும் நாளை மருந்து கடைகள் அடைப்பு.!

கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்.இந்நிலையில், இந்த சம்பவம் காரணமாக, தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் அடைப்பு என மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருந்து வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று தமிழக முழுவதும் கடைகள் அடைப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறை நாளை கடைகள் அடைப்பு என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.