திருமண அழைப்பிதழில் தாய்மாமன் பெயரை அச்சிட்டதால் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு !!!

திருமண அழைப்பிதழில் தாய்மாமன் பெயரை அச்சிட்டதால் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரமணி சாமுவேல். சமீபத்தில் இவருடைய மகன் ஜோசப்பு திருமணம் நடந்தது. அவரது மகனின் திருமண அழைப்பிதழில் தாய்மாமன்  சாமுவேலின் பெயரை அச்சிடவில்லை. சாமுவேலின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் கேட்க வரமணி சாமுவேல் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே கடும் சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த சண்டை முற்றிய நிலையில்  வரமணி சாமுவேல்,மற்றும் அவரது மகனையும் சாமுவேலின் மகன் சதிஷ் கத்தியால் குத்தியுள்ளார்.இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாமுவேலின் மகன் சதிஷ்சை போலீசார்  தீவிரமாக தேடிவருகின்றனர்.

Leave a Comment