டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட்டுகளை விவசாயின் மகன் வழங்கி உதவியுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 16-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி-ஹரியானா எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட்டுகளை விவசாயின் மகன் ஒருவர் இலவசமாக வழங்கி உதவியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள விவசாயி ஒருவரின் மகனான ஷகீல் முகமது குரேஷி என்ற நபர் வடக்கு டெல்லியின் நரேலாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் .இவர் தினமும் காலை 8 மணியளவில் சாலையோரத்தில் உள்ள தனது கடையை திறந்து விவசாய போராட்டத்தில் குளிரில் நடுங்கும் விவசாயிகளுக்கு சுமார் 300 ஜாக்கெட்டுகள் மற்றும் ஸ்வெட்டர்களை இலவசமாக வழங்கியுள்ளார் .இது குறித்து குரேஷி கூறுகையில் என் தந்தையும் ஒரு விவசாயி,எனவே அவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது என்பது தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ,சில தனி நபர்களும் விவசாயிகளின் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளையும் விநியோகித்து வருகின்றனர்.மேலும் சிலர் மருத்துவ முகாம்களையும் அமைத்து விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…
Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…