பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் அழிப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மதுராவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்திலும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு தனது ஆணவத்தில் விவசாயிகளுக்கு பலன் அளிக்காத சில சட்டங்களை விதித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைத்து எரிவார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், அரசு மற்றும் பிரதமரின் கடமை விவசாயிகளின் குரலைக் கேட்பதும் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பது தான். ஆனால் விவசாயிகளுக்கு எதிரான இழிவான சொற்களை பயன்படுத்துவது பாவம். அரசாங்கத்தை அமைக்க கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க வேண்டிய கடமை இருக்கும்பொழுது, தலைவர் திமிர்த்தனமாக இருந்தால் அவருடைய கொள்கைகள் மக்களுக்கு நன்மை பயக்காது என தெரிவித்துள்ளார்.
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…