விவசாயிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கப்படும்…! – முதல்வர் பழனிசாமி

விவசாயிகளுக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று சேலம் திட்டம் பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர்சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், விவசாயிகளுக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக அரசு , ஐந்து ஆண்டு காலத்தில் இரண்டு முறை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து செய்துள்ளது  என்றும், விவசாயிகளுக்காக மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.