டெல்லியில் விவசாயிகள் போராட்டம்! டெல்லி-நொய்டா எல்லை மூடல்!

வேளாண் சட்டத்தை எதிர்த்து 7-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம். மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி – நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது.

டெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 நாட்களாக பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்று வருகிற நிலையில், தற்போது டெல்லி – நொய்டா எல்லை அருகே விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி – நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியில் செல்ல வேண்டாம் என்றும், போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.