விவசாயிகள் போராட்டம்.. பாஜக எம்.பி சன்னி தியோல் Y பிரிவு பாதுகாப்பு..!

விவசாயிகள் போராட்டம்.. பாஜக எம்.பி சன்னி தியோல் Y பிரிவு பாதுகாப்பு..!

பாலிவுட் நடிகரும் பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சன்னி தியோல் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.பி ஆவார்.

64 வயதான சன்னி தியோலுக்கு 11 பேர் பிளஸ் கொண்ட ஒய் பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளது. இதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் போலீஸ்காரர்கள் உள்ளனர். பாதுகாப்புப் படை குழு எப்போதும் சன்னி தியோலுடன் இருக்கும். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சன்னி தியோலுக்கு புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசிற்கு ஆதரவாக பேசிய பின்னர் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube