தோனிக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த தயார் – பிசிசிஐ அதிகாரி தகவல்

தற்போது ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதால் ஃபேர்வெல் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஐபிஎல் முடிந்ததும் தோனியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் – பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல்.

கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையாக அறிவித்தார். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தாங்கள் எப்போதும் தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயாராக இருந்ததாகவும், ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓய்வை அறிவித்துவிட்டு தான் ஒரு வித்தியாசமான வீரர் என்பதை தோனி வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதால் ஃபேர்வெல் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஐபிஎல் முடிந்ததும் தோனியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்