கனமழை எதிரொலி !தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை

கனமழை எதிரொலி !தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,கனமழை தொடர்பாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.எனவே  தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான பகுதியாக மாறியுள்ளது. புயல் உருவானால் வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 25,26ல் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஏப்ரல் 27,28ல் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *