புகழ் பெற்ற தமிழ் திரைப்பட ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று!

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

ஜூன் 24ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு பிறந்தவர்தன் முத்தையா என அழைக்கப்படும் கவியரசு கண்ணதாசன். இவருக்கு ஆறு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயதிலேயே எழுத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு சிறு புத்தகங்களை வாசித்து பத்திரிக்கை எழுத வேண்டுமென ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். இவரது இந்த ஆர்வம் காரணமாக இவர் தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக உருவெடுத்தார்.

இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். மேலும் இவர் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். மேலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்தவர். சேரமான் காதலி படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்ற இவருக்கு மேலும் கம்பர் மற்றும் பாரதியாரின் பாடல்களில் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளது.

இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டு இருந்த நிலையில், இவரது இவர் 1981-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் இவரது நினைவாக தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும் கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் கூடிய நூலகம் உள்ளது. மேலும், அந்த அரங்கில் கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal