சென்னையில் பிரபல நகை கடையில் தீ விபத்து…!

சென்னையில் பிரபல நகை கடையில் தீ விபத்து.

சென்னை பாரிமுனையில் உள்ள பாத்திமா என்ற பிரபல நகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து, உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியே ஓடி  வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணைய மேற்கொண்ட நிலையில், முதற்கட்ட தகவலாக ஏசியில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.